Tuesday, 11 April 2017

அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !

அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !


1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)



2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)



3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)



4. சமய உரிமை (25-28)



5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)



6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)



சமத்துவ உரிமை :



பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.



பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.



பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.



பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.



சுதந்திர உரிமை



பிரிவு 19



அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்



அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்



ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்



இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்



ஈ. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்



உ. நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.



ஊ. எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)



பிரிவு 20



அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.



ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.



இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.



பிரிவு 21.



எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.



பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு



அ. கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.



ஆ. 3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.



இ. தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.



பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.



மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.



பிரிவு 24:



14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது..






இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்..

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்

இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்

இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி

இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா

இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா

இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி

இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்

ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி

முதல் பெண்அமைச்சர்  -  விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர்  -  ராஜ்குமாரி அம்ரித் கௌர்

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை  -   தேவிகா ராணி

முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி  -  அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  -   கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் பாரிஸ்டர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி   -  அன்னா சாண்டி

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி  -  ஃபாத்திமா பீவி

முதல் பெண் மருத்துவர்  -  காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர்   -  பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன்  -  முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் டிஜிபி  -  காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர்  -   ஹோமி வியாரவாலா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்  -  பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண்  -   அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண்  -   ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண்  -  ஜூம்பா லாகிரி

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்  -  எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர்   -  அஞ்சலி ராஜகோபால்

இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்

No comments:

Post a Comment