Sunday, 16 April 2017

வங்கியில இத்தனை வகைகள் இருக்கா?

வங்கியில இத்தனை வகைகள் இருக்கா?


நுகர்வோர் வங்கிகள் (கன்ஸ்யூமர்ஸ் பாங்க்)

ஏற்கனவே உள்ள வங்கிகளில் தற்போதைய புதுவரவு இந்த நுகர்வோர் வங்கிகள். இது போன்ற வங்கிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் நுகர்வோர்களுக்கு நீடித்து உழைக்கும் நுகர்வு பொருட்களான கார், டிவி, வாஷிங் மெஷின் ஆகியவற்றை வாங்குவதற்கான கடன்களை அளிப்பதாகும். இந்தக் கடனை நுகர்வோர்கள் தவணை முறையில் திரும்பச் செலுத்தலாம்.



பரிமாற்ற வங்கிகள் (எக்ஸ்சேஞ்ச் பாங்க்)

ஹாங்காங் பாங்க், பாங்க் ஆஃப் டோக்கியோ மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்தப் பரிமாற்ற அல்லது அயல் நாட்டு வங்கிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த வங்கிகளின் முக்கிய நோக்கம் அயல் நாட்டு வர்த்தகத்திற்கு நிதியுதவி செய்வது. இவை அடிப்படையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பணத்தை அனுப்புவது, அயல் நாட்டுச் செலுத்துகை பில்களைத் தள்ளுபடி அடிப்படையில் செலுத்துவது (டிஸ்கவுண்டிங்), தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது விற்பது மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.



கூட்டுறவு வங்கிகள்

இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1912-இன் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் சிறிய விவசாயிகள், மாத சம்பளம் ஈட்டும் பணியாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்குக் கடன் அளிக்கின்றன.

இந்த வங்கிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் அமைந்திருக்கும். இவற்றின் செயல்பாடுகள் பிற வர்த்தக வங்கிகளைப் போன்றே இருக்கும்.



வர்த்தக வங்கிகள்

இந்தியாவில், வர்த்தக வங்கிகள் நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு 14 வர்த்தக வங்கிகளை அரசுடைமையாக்கியது. வைப்புகள், கடன்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வர்த்தக வங்கிகள் தொழில் புரிவோருக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டன.

இந்த வங்கிகள் பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று அவற்றைத் தொழில் புரிவோர்க்குக் குறுகிய காலக் கடன்களை ரொக்கமாகவோ அல்லது கூடுதல் பற்று (ஓவர் ட்ராப்ட்) மூலமாகவோ வழங்குகின்றன.

இந்த வங்கிகள் காசோலை (செக்) வசூல், பில் பரிமாற்றம் மற்றும் பணச் செலுத்துகை போன்ற பல்வேறு சேவைகளைத் தருகின்றன.



மத்திய மற்றும் தேசிய வங்கிகள்

மத்திய வங்கிகள் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் இது ரிசர்வ் வங்கி எனவும், அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி எனவும் இங்கிலாந்தில் பாங்க் ஆஃப் இங்க்லேண்ட் எனவும் இயங்கி வருகிறது.

இந்த மத்திய வங்கிகள் பெரும்பாலும் மற்ற வங்கிகளுக்கு வங்கியாகச் செயல்படுகின்றன. காகித ரூபாய் தாள்கள் வெளியிடுவது, அரசிற்கு வங்கியாகச் செயல்படுவது, அன்னிய செலாவணியை நெறிமுறைப் படுத்துவது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளை இவை செய்கின்றன. இந்த மத்திய வங்கிகள் இலாப நோக்கமற்றவை.



தொழில் மற்றும் வளர்ச்சி வங்கிகள்

இந்த வங்கிகள் பெரும்பாலும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாகவும், நீண்ட காலக் கடன்களை நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலமாகவும் பணத்தைச் சேகரிக்கின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட காலக் கடன் அளித்து அவற்றை விரிவு படுத்தவும் நவீனப் படுத்தவும் உதவுகின்றன.

இந்தியாவில், இதுபோன்ற வங்கிகள் சுதந்திரத்திற்குப் பின் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் இந்திய தொழில் முதலீட்டுக்கழகம் (ஐஎஃப்சிஐ), இந்திய தொழில் நிதி மற்றும் முதலீட்டுக் கழகம் (ஐசிஐசிஐ) மற்றும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) ஆகியவை முக்கியமானவை).

Tuesday, 11 April 2017

இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்..

இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்..

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்

இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்

இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி

இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா

இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா

இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி

இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்

ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி

முதல் பெண்அமைச்சர்  -  விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர்  -  ராஜ்குமாரி அம்ரித் கௌர்

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை  -   தேவிகா ராணி

முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி  -  அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  -   கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் பாரிஸ்டர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி   -  அன்னா சாண்டி

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி  -  ஃபாத்திமா பீவி

முதல் பெண் மருத்துவர்  -  காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர்   -  பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன்  -  முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் டிஜிபி  -  காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர்  -   ஹோமி வியாரவாலா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்  -  பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண்  -   அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண்  -   ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண்  -  ஜூம்பா லாகிரி

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்  -  எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர்   -  அஞ்சலி ராஜகோபால்

இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்


தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள் !

தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள் !


பதவியின் பெயர் :



காவல்துறைத் தலைமை இயக்குனர்(DGP)



குறியீடு :



அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறைத் தலைவர்(IGP)



குறியீடு :



ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)



குறியீடு :



அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)



குறியீடு :



அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)



குறியீடு :



அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)



குறியீடு :



அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)



குறியீடு :



மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து



பதவியின் பெயர் :



காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)



குறியீடு :



மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து



பதவியின் பெயர் :



ஆய்வாளர் (Inspector)



குறியீடு :



மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்



பதவியின் பெயர் :



உதவி ஆய்வாளர் (Sub-Inspector)



குறியீடு :



இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்



பதவியின் பெயர் :



தலைமைக் காவலர் (Head Constable)



குறியீடு :



சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்



பதவியின் பெயர் :



முதல்நிலைக் காவலர் (PC-I)



குறியீடு :



சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்



பதவியின் பெயர் :



இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)



குறியீடு :



பட்டை எதுவுமில்லை.

அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !

அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !


1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)



2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)



3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)



4. சமய உரிமை (25-28)



5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)



6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)



சமத்துவ உரிமை :



பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.



பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.



பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.



பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.



சுதந்திர உரிமை



பிரிவு 19



அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்



அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்



ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்



இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்



ஈ. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்



உ. நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.



ஊ. எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)



பிரிவு 20



அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.



ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.



இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.



பிரிவு 21.



எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.



பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு



அ. கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.



ஆ. 3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.



இ. தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.



பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.



மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.



பிரிவு 24:



14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது..






இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்..

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்

இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்

இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி

இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா

இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா

இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி

இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்

ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி

முதல் பெண்அமைச்சர்  -  விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர்  -  ராஜ்குமாரி அம்ரித் கௌர்

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை  -   தேவிகா ராணி

முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி  -  அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  -   கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் பாரிஸ்டர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி   -  அன்னா சாண்டி

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி  -  ஃபாத்திமா பீவி

முதல் பெண் மருத்துவர்  -  காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர்   -  பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன்  -  முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் டிஜிபி  -  காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர்  -   ஹோமி வியாரவாலா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்  -  பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண்  -   அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண்  -   ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண்  -  ஜூம்பா லாகிரி

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்  -  எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர்   -  அஞ்சலி ராஜகோபால்

இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்

தெரிந்து கொள்ளுங்கள் !! காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை

தெரிந்து கொள்ளுங்கள் !! காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை !

1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)



2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை ( Armed Police or Tamil Nadu Special Police )



3. பொதுமக்கள் பாதுகாப்பு ( Civil Defence and Home Guards )



4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை ( Civil Supplies, CID)



5. கடலோர காவல் துறை ( Coastal Security Group )



6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை ( Crime Branch, CID)



7. பொருளாதார சிறப்புப் பிரிவு ( Economic Offences Wing )



8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி ( Operations - T.N. Commando Force & Commando School )



9. இரயில்வே காவல்துறை ( Railways)



10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ( Social Justice and Human Rights)



11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு ( Special Branch , CID including Security)



12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)



13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)



14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)



15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)



16. பயிற்சிப் பிரிவு (Training)

தொலைபேசி உரையாடல் எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது

தொலைபேசி உரையாடல் எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது.

இந்திய அரசியலில் கடந்த ஆண்டு ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.



     Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU(International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute -http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches)வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.



     விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF(Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.சற்று விரிவாக பார்க்கலாம்.



     உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.



     கீழ்க்கண்ட தகவல்களுக்கு இந்த படத்தை ரெபர் செய்யவும்]உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre)எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது.



     எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை. Law of Average!சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.



     இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3(Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும். இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))



     தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat)போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:))

இந்திய வாரிசுரிமைச் சட்டங்கள்

இந்திய வாரிசுரிமைச் சட்டங்கள்

ஒரு இந்துப்பெண் இறந்துவிட்டால், அவளது சொத்து அவளது குழந்தைகளுக்கும் (ஆண், பெண்) கணவருக்கும் சேருகிறது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னரே, அவரது மகன் உயிர் நீத்திருந்தால், பேரக்குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்து ஒரு சமபங்கு ஒதுக்கப்படுகிறது.

முஸ்லீம்களது சொத்து வாரிசுரிமைச் சட்டங்கள் சிக்கலானவை. ஷியாக்களுக்கும், சன்னிக்களுக்கும் வாரிசுரிமைகள் வேறுபடுகிறன. ஆனால் கீழ்கண்ட மூன்று பொதுவான விதிகள் அனைவருக்கும் பொருந்தும்:-

1. இறுதிச் சடங்குகளுக்குச் செலவினங்கள், கடன்கள் ஆகியவற்றை அடைத்த பின்னர், மீதியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான், உயில் எழுதி வைக்கமுடியும்.
2. ஒரு ஆனுக்கு, பெண்ணைவிட இரண்டு மடங்கு சொத்துரிமை உண்டு.
3. ஒரு பரம்ரையில் வந்த வாரிசுதாரர்கள் என்கிறபோது, நெருக்கமான மகளை எடுத்துக் கொண்டு, பேரனை விட்டுவிடலாம். மகன் பேரனைவிட நெருக்கமானவர் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த வாரிசுரிமைச் சட்டம் இந்திய கிறித்துவர்களிடையே சொத்துரிமை பகிர்விற்கு வழிவகை செய்கிறது. சிறப்புத் திருமணச் சட்டபடித் திருமணம் செய்து கொண்டவர்கள், இந்தியப் பிரஜா உரிமை பெற்ற ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், யூதர்கள் ஆகியோருக்கும் வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும்.

கணவனை இழந்த பெண்ணுக்கு, அவரது கணவன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது. மீதமுள்ள சொத்துகள், இறந்தவருடைய வாரிசுதாரர்களுக்குச் சேருகிறது. வாரிசுகள் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தைத்தான் பிரித்துக் கொள்ள வேண்டும். விதவை மனைவி மட்டுமே இருந்தால், அவருக்கு கணவனது சொத்தில் பாதி சேரும். மீதி, கணவனது தந்தைக்கும் சகோதரிகளுக்கும் சேரவேண்டும். ஒரு பெண்ணின் சொத்தும், இதே அடிப்படையில்தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பார்சி இனமக்களிடையில் ஒர் ஆணின் சொத்து, விதவை மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண் குழந்தைக்கும், விதவைக்கும் ஒரு பெண் குழந்தைக்குரிய பங்கில், இரண்டு மடங்கு பிரித்துத் தரப்படுகிறது. தந்தைக்கு பேரனின் பாதிப்பங்கும், தாய்க்கு பேத்தியின் பாதிபங்கும் வழங்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் சொத்து, கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

நிதி அல்லது இன்சூரன்ஸ் பாலிசியில் (நியமனதாரர்) நியமிக்கப்படும் பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கே சொத்துரிமை மாற்றப்படுவதில்லை. பிரதிநிதி (நியமனதாரர்) என்று குறிப்பிடுவது, அந்தப் பிரதிநிதி அறங்காவலர் சொத்துக்குப் பொறுப்பானவர் என்ற அடிப்படையில்தான் நியமனதாரர் பெயர் சில பத்திரங்களில் நாமினி பெயர் என்று குறிப்பிடப்படுகிறது.

கணவனது சொத்துக்கள் பிரிக்கப்படும்போது, மனைவியின் சொந்தச் சொத்துக்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. பெண்ணிற்கே அவலது சொந்தச் சொத்தில் முழு உரிமை உண்டு. பெண்ணின் சொத்துக்கள் என்று சொல்லும் போது, அவள் சம்பாதித்தது, தனிப்பட்ட சொத்துக்கள், அவள் பெற்ற வெகுமதிகள் (திருமணத்தின் போது) அதில் அடங்கும்.

உயில்

ஒருவர் இறப்பதற்கு முன்னர், உயில் எழுதப்படுகிறது. சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்க்கள் வழக்குகள் சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயில் எழுதி வைக்கப்படுகிறது. உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, அறக்கட்டளைகள் உட்பட எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம்.

இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.

ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் - அவர்கள் கணவன்/ மனைவி அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வழக்கு தொடர தேவையான தகுதிகள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வழக்கு தொடர தேவையான தகுதிகள்.


இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற் கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூல ம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்ப ட்ட தின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதார ணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படு ம் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற் படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப் பட்டுள்ளது. இனி அது பற்றி பார் க்கலாம்.



நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல் பாடும்:


கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று இருப்ப தை போலவே இச்சட்டப்படி – மா வட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம், தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:




20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்ட ணம் எதுவும் செலுத்தவேண் டியது கிடையாது. இத னால் வழக்கு தொடருவதற்கு தகுதி யே இல்லாத பிரச்சனைக்கெ ல்லாம் வழக்கு தொடர ஆரம் பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்க ளும் அடங்கும். இது போன்ற வழக் குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள் படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம்மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்ட ணம் நிர்ணயம் செய் ய்ப்பட்டுள்ளது.



1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-

1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-

5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-

10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-


வழக்கு தொடர தேவையான தகுதிகள்:


1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.



2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdi- ction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.

3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?


1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இ தில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனை வருமே இதில் உட்படுவர்.



உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண் டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.


2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற் றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.


உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன் ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனி கள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.



எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலி டப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார் த்தைக்கான விள க்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ள லாம். இந்த சட்டம் வந்த பின்பு, ப லர் இந்த அலுவலகத்தில் அவஸ் தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.




ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க மு டிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப் பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டன ர். அதை நம்பி, அவர் அந்த சொ த்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்த து. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர் டிபிகேட் டிப் பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்று க்கொண்டு வழங் கப்படும் சேவை என்பதால், நுக ர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடி வு. அவர் நுகர்வோர் குறைதீர் மன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால்இலாகா பொறுப்பு அல்ல” என குறி ப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங் கள் பொறுப்பல்ல என வாதம் செய் தனர். ஆனால் அவர்களின் ஆட்சே பனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத் தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவ டையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.


வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:



உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்கு கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள் வு குறைவாக இருந்தாலோ அல்ல து தரம் குறைவாக இருந் தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக் காரரிடம் சுட்டிக்காட் டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவ ருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர் வோர் வழக்கு தொட ரப்படும்” என அத்தாட்சியுடன் கூடி ய பதிவு தபாலில் நோட்டீஸ் அனு ப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீ தும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.



விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.


தரம் சம்பந்த பிரச்சனை என் றால், அதே பாக்கிங் கவரு டன் பொரு ளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.




எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக் கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வை த்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போ ட்டு வாங்கிக்கொளுங்கள்.



இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக் கான ரசீது இருக்கவேண்டு ம். முன்பு குறிப்பிட்ட படி யே சம்பந்தப்பட்டவர்களுக் கு நோட்டீஸ் அனுப்புங் கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொ ள்ளுங்கள்

அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சட்ட பிரிவுகள்

அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சட்ட பிரிவுகள்


1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217

3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404

4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)

7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295

24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419

26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495

30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள்

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள்


1) இந்திய தண்டனைச் சட்டத்தின் எல்லை (territorial of indian penal code) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 1-18 ] கூறுகிறது.

2) சில பொது விளக்கங்கள் (some of general explanation) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 19-52 ] கூறுகிறது.

3) தண்டனையின் நோக்கமும் வகைகளும் (objective and types of punishment) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 53-75 ] கூறுகிறது.

4) பொது எதிர்வாதங்களும், விதிவிலக்குகளும் (general defences and general exceptions) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 76-105 ] கூறுகிறது.

  :பொருண்மைத் தவறு (mistake of fact) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 76 ] கூறுகிறது.

  :நீதிமுறை செயல்கள் (judicial acts) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 77, 78 ] கூறுகிறது.

  :தற்செயல் நிகழ்ச்சி மற்றும் துரதிர்ஷ்டம் (accident and misfortune) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 80 ] கூறுகிறது.

  :தேவை (அ) தவிர்க்க முடியாத விபத்துக்கள் (necessity or inevitable accidents) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 81 ] கூறுகிறது.

  :குழந்தை தன்மை (infancy) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 82,83 ] கூறுகிறது.

  :பித்து நிலைமை (insanity) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 84 ] கூறுகிறது.

  :குடிபோதை நிலை (drunkenness or intoxication) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 85,86 ] கூறுகிறது.

  :சம்மதம் (அ) இசைவு (consent) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 89-92 ] கூறுகிறது.
எ.கா- அச்சத்தினால், அறியாமையினால், பித்து நிலையில் கொடுக்கும்
சம்மதம்

  :வற்புறுத்தல் (compulsion) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 94 ] கூறுகிறது.

  :அற்பமான விசயங்கள், செயல்கள் (trifles or trivial acts) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 95 ] கூறுகிறது.

  :தற்காப்புரிமை (rights of private defence) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 96-106 ] கூறுகிறது.

5) அரசுக்கு எதிரான குற்றங்கள் (offences against state) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 121-130 ] கூறுகிறது.

6) பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோதமான கூட்டம்,
கழகம் விழைவித்தல், சச்சரவு (offences against the public tranquility, unlawful assembly
rioting, affray) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 141-160 ] கூறுகிறது.

7) பொது ஊழியர்களால் செய்யப்படும், (அ) அவர்கள் சம்பந்தமான குற்றங்கள்
(offences by or relating to public servants) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 161-171 ] கூறுகிறது.

8) தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் (offences relating to elections) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 171-A to 171-I ] கூறுகிறது.

9) பொய் சாட்சியம் அளித்தல் (giving false evidence) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 191-200 ] கூறுகிறது.

10) பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் (offences against public justice) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 201-229 ] கூறுகிறது.

11) பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப்
பாதிக்கும் குற்றங்கள் (offences affecting the public health, safety, convenience, decency and morals)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 268-294 ] கூறுகிறது.

12) நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to coin and
government stamps) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 230 to 263-A ] கூறுகிறது.

13) உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting life) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 229-311 ] கூறுகிறது.

14) கருவை சிதைத்தல், கைகுழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல்
மற்றும் பிறப்பை மறைத்தல்(causing of miscarriage,exposure of infants and the
concealment of birth) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 312-318 ]
 கூறுகிறது.

15) மனித சுதந்திரத்துக்கு எதிரான குற்றம், முறைகேடான சிறைவைப்பு
(offance against human freedom, Wrongful confinement) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 339 to 348 ] கூறுகிறது.

16) குற்றமுறு வன்முறை ,குற்றமுறுத் தாக்குதல் ,தாக்கமுனைதல்
(criminal fore ,assault) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 349 to 358 ] கூறுகிறது.

17) ஆட்கவர்தல்(குழந்தை, சிறுவர்) மற்றும் ஆட்கடத்தல்
( kidnapping and abduction ) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 359 - 369 ]
கூறுகிறது.

18) பாலியல் குற்றங்கள் ( sexual offences) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 375 - 376 D ] கூறுகிறது.

19) இயற்க்கைகு மாறான சேர்க்கை (அ) இயற்க்கைகு மாறான குற்றங்கள்
(unnatural offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 377 ]
கூறுகிறது.

20) திருட்டு (theft) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 378 - 382 ] கூறுகிறது.

21) அச்சுறுத்திப் பறித்தல் (extortion) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 383 - 389 ] கூறுகிறது.

22) கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை
( robbery and decoity) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 390 - 402 ] கூறுகிறது.

23) குற்றமுறு சொத்துக் கையாடல் (criminal misappropriationof property)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 403,404 ] கூறுகிறது.

24) குற்றமுறு நம்பிக்கை மோசடி (criminal breach of trust) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 405 - 409 ] கூறுகிறது.

25) திருட்டு பொருள் (அ) சொத்தை பெற்றுக் கொள்ளுதல்
(receiving of stolen property) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 410 - 414 ] கூறுகிறது.

26) ஏமாற்றுதல் (cheating) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 415 - 420 ] கூறுகிறது.

27) தன்சொத்தை (அ) பொதுச் சொத்தை அழித்தல் குற்றம் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 425 - 440 ] கூறுகிறது.

28) குற்றமுறு அத்துமீறல் (criminal trespass) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 441 - 462 ] கூறுகிறது.

29) ஆவணங்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to
documents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 463 - 477 A ]
கூறுகிறது.

30) சொத்து மற்றும் பிற அடையாளக் குறிகள் சம்பந்தமான
குற்றங்கள் (offences relating to property and other marks) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 478 - 489 ] கூறுகிறது.

31) பணத் தாள்கள் மற்றும் வங்கித் தாள்கள் சம்பந்தமான குற்றங்கள்
(offences relating to currency Notes and bank notes) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 489A - 489E ] கூறுகிறது.

32) மண வாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள் (offences relating to marriage)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 493 - 498A ] கூறுகிறது.

33) அவதூறு (defamation) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 499 - 502 ] கூறுகிறது.

34) குற்றமுறு மிரட்டல் , அவமதிப்பு மற்றும் தொந்தரவு செய்தல்
(criminal intimidation ,insult and annoyance) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 503 - 510 ] கூறுகிறது.

35) மதம் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to religion)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 298 ] கூறுகிறது

36) வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருட்களின்
புனிதத் தன்மையைக் கெடுத்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 297 ] கூறுகிறது

37) மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295A - 298 ] கூறுகிறது

38) மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 296 ] கூறுகிறது

ஆரைக்குளம் மலையாண்டி சாஸ்தா

இதோ சபரிமலை சீஸன் ஆரம்பமாகப் போகிறது. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற சரண கோஷம் உங்கள் காதுகளில் எல்லாம் ஒலிக்கப் போகிறது. அந்தக் கல், முள் ஆனந்த அனுபவம் சபரிமலை போனால்தான் கிடைக்கும் என்பதில்லை. நம் தமிழகத்திலேயே தூத்துக்குடி அருகில் உள்ள ஆரைக்குளம் மலையாண்டி சாஸ்தா கோயிலுக்குச் சென்றாலும் கிடைக்கும்.

பக்தர்கள் பலருக்கும் ஓர் ஐயம் இருக்கும். சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், நம் ஊரில் மட்டும் திருமணம் ஆனவராக, அதுவும் இரண்டு மனைவிகளுடன் காட்சி தருவது ஏன் என்ற சந்தேகம்! அது தவிர ஐயப்பனுக்கு ஒரு மகனும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்த சந்தேகங்கள் தௌ£வதற்கு முன்பாக, மலையாண்டி சாஸ்தாவை தரிசனம் செய்து விட்டு வரலாமா?

தூத்துக்குடியிலிருந்து கோவில் பட்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரைக்குளம் கிராமத்தில், செம்மண் மலையின் மீது அமைந்திருக்கிறது மலையாண்டி சாஸ்தா கோயில். தொலைவிலிருந்து பார்த்தாலே மலையும், கோயிலும் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறது. அய்யனை மனதில் துதித்துக் கொண்டே, இரண்டு கி.மீ. நடக்க வேண்டும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!

இதோ மலை மீது மூச்சு வாங்க ஏறி வந்து விட் டோம்!

காவி பூசப்பட்டு கம்பீரமான மதிற்சுவர்களுடன் காட்சியளிக்கும் கோயிலின் முன்னால் ஒரு சிறிய மேடை யில் இரண்டு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

வித்தியாசமாகக் காணப்படும் அதற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

அருகிலிருக்கும் உள்ளூர்க்காரர்கள் கந்தசாமி, முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டபோது, அது ஒரு காதல் கல்வெட்டு என்பது புரிந்தது. காதல் தாஜ்மஹால்!

இதோ அந்தக் கதை!

மணிக்கட்டித் தேவர் என்பவர் இந்த ஊர்க்காரர். அவருக்கு முத்தம்மா என்ற பெண் ணின் மீது காதல்.

முத்தம்மா வேறு ஜாதியைச் சார்ந்தவள். அண்ணன், தம்பி ஆறு பேருடன் பிறந்தவள்.

காதலை ஜாதி தடுத்தது. தடுக்கத் தடுக்கத் தானே காதல் வளரும்!

எல்லாக் காதலர்களுக்கும் வரும் அதே ஐடியா, அவர்களுக்கும் தோன்றிற்று. ஆம். ஊரை விட்டு ஓடி விடலாமா?

சுப யோக... இல்லை. சுபமும் யோகமும் இல்லாத நேரத்தில் காதலர்கள் ஊரை விட்டு ஓடினார்கள். அவர்கள் ஓடி ஒளாந்த இடம் மலையாண்டி சாஸ்தா கோயில் இருக்கும் மலைப் பகுதி. அப்போது இந்த மலை அடர்ந்த காடாக இருந்தது. ஒளாந்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வனம்.

முத்தம்மாவின் சகோத ரர்கள் கடும் ஆத்திரத்துடன் மணமக்களைத் தேடினார்கள். அவர்களின் கோபம் கொலைவெறியாக மாறியிருந்தது.

தெய்வீகக் காதலர்களாக இருந்தாலும், சோறு சாப்பிட்டாக வேண்டுமே? காட்டில் கிடைத்த காய்களை வைத்து முத்தம்மா ஏதோ உணவு தயாரிக்க, அதனால் எழுந்த புகை, ஊருக்குள் இருப்பவர்களிடம் இவர்களை காட்டிக் கொடுத்தது. புகை.....பகை!

காதல் எதிரிகள் கைகளில் ஆயுதங்களுடன் மலைக்காட்டுக்குள் புகுந்தார்கள்.

காதலர்களைத் தேடிப்பிடித்து, வெட்டிச் சாய்த்து... முத்தம்மா சமைத்த அரிசியே,வாய்க்கரிசியாக மாறிப் போனது.

காதலர்கள் மறைந்தாலும், அவர்களின் நினைவாக அந்த ஸ்தூபிகள் மட்டும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.

இதோ இப்போது கோயிலுக்குள் நுழை வோமா?

நுழைவதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயம். நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருவதாக இருந்தால், சும்மா மலையேறி வந்து விடாதீர்கள். கோயில் பூட்டித்தான் இருக்கும். அதனால் ஆரைக்குளம் கிராமத்திலேயே தபால்காரர் வீட்டில் சாவி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் யாரையாவது கூட அனுப்புவார்கள். இதை மறந்து விடாதீர்கள். மறந்தால் 2 கி.மீ. மீண்டும் நடக்க வேண்டும். ஜாக்கிரதை.

கருவறையில் தேவிகள் பூரணா, புஷ்கலாவுடன் யானை வாகனத்தில் அமர்ந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் மலையாண்டி சாஸ்தா. முக்குலத்தோருக்கான பரம்பரை தெய்வம் இவர்தான். 80 கிராம மக்களை மலையில் இருந்தபடியே மகிழ்ச்சி பொங்க வைப்பதாலோ என்னவோ தானும் மகிழ்ச்சியாக, புன்னகை தவழக் காட்சியளிக்கிறார் ஐயன்.

“பங்குனி உத்திரத்தன்னிக்குப் பாக்கணும் கூட்டத்தை. 80 கிராமத்து முக்குலத்தோரும் திருவிழா மாதிரி வந்து கூடுவாங்க. இந்த மலையே அன்னிக்குப் பக்தர்களாலே நிரம்பியிருக்கும். உலகத்துல எந்த ஊர்ல இருந்தாலும் கிராமத்து மக்கள் எல்லாரும் அன்னிக்கு இங்கே வந்து சேர்ந்திடுவோம்’’ பரவசத்துடன் கூறும் சினிமா டைரக்டர் டி.பி. கஜேந்திரன், ”மலையாண்டி சாஸ்தா கோயிலுக்கு பக்தர்கள் வரதுக்கு வசதியா சாலை வசதியும், குடிதண்ணீர் வசதியும் அரசாங்கம் செய்து கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். இந்த இடம் வனத்துறையின் ¢கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு கொஞ்சம் மனது வைக்கவேண்டும்“ என்கிறார்.

கருப்பசாமி, பேச்சியம்மை, இருளப்பர், காக்காச்சி, ராக்காச்சி ஆகியோரும் இந்த மலைக்கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.

சாஸ்தா சன்னதிக்குப் பின்னால் இருக்கும் இரண்டு மரங்களை மட்டும் பார்க்காமல் வந்துவிடாதீர்கள். முடிந்தால் அதன் இலைகளில் இரண்டையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். அந்த இலைகளைத் தின்றால் தீராத நோய்களெல்லாம் தீருமென்பது நம்பிக்கை.

அதற்கும் ஒரு கதை இருக்கிறது. பல வருடங் களுக்கு முன்பு, இருளப்பசாமிக்குப் பொங்கல் வைக்க ஒரு குடும்பம் இங்கே வந்திருந்தது. அப்போது கடும் மழை. சாமி கும்பிட்டுவிட்டு, வீடு திரும்பும்போது,, பொங்கல் கிண்டிய அகப்பையையும் துடுப்பையும் இங்கேயே நட்டுவைத்துவிட்டுச் சென்றார்கள். மறுநாள் இருளப்பசாமியின் அருளால், அவையிரண்டும் துளிர் விட்டு மரமாக மாறியிருந்தன. அன்று முதல், இந்த மரத்தையும் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள்.

சரி, சபரிமலையில் திரு மணம் ஆகாதவராக இருக்கும் ஐயப்பனுக்குத் தமிழகத்தில் மட்டும் இரண்டு மனைவிகள் வந்த கதையை இப்போது பார்க்கலாமா?

கயிலாயம்

முதல்முதலில் ஐயப்பன் இருந்தது கயிலாயத்தில்தான். விநாயகர், முருகன் ஆகியோரோடு அவரும் ஒருவராக இருந்து வந்தார். அவர் எப்படி சபரிமலை வந்தார்? முதலில் கயிலாயத்திற்குப் பக்கத்திலுள்ள நேபாளத்திற்குப் போகலாமா?

நேபாளம்

நேபாளத்தை அப்போது பளிஞன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கை தேர்ந்த மந்திரவாதியும் கூட. ஆனாலும் நல்லெண்ணம் படைத்தவன்.

அவனது ஒரே ஆசை 1000 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்வது?

கன்னிப் பெண் ஒருத்தி யைக் காளிக்குப் பலி கொடுத் தால் எண்ணம் நிறைவேறும் என்றது அவனது மந்தி(ர) புத்தி.

குறிப்பிட்ட தகுதி களுடன் ஒரு பெண் தேர்ந் தெடுக்கப்பட்டாள்.

நரபலிக்கு நாள் குறிக்கப்பட்டது.

எல்லாம் பார்த்த மன்னன் ஒன்றை மட்டும் மறந்துவி¢ட்டான். அந்தப் பெண் தீவிரமான சிவ பக்தை என்பதை.

1000 ஆண்டுகள் வாழ மன்னன் அவளைப் பலியிடத் துடிக்க, அவளோ தன் உயிர் பிழைக்க சிவனைக் கும்பிட்டாள்.

பார்த்தார் சிவன். ஐயப்பனை அழைத்தார். பக்தையைக் காப்பாற்றுமாறு அனுப்பிவைத்தார்.

விரைந்தார் ஐயப்பன். அவரைப் பார்த்ததுமே ஆடிப்போய்விட்டான் மன்னன்.

அப்புறம்? பக்தை காப்பாற்றப்பட்டாள்.

மனம் மாறிய மன்னன், தன் மகளையே ஐயப்பனுக்கு மணம் முடித்து வைத்தான். மகளின் பெயர் புஷ்கலா!(ஐயப்பனுக்கும், புஷ்கலாவுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் சத்யகன்!)

கொச்சி

அந்தக் காலத்தில் கொச்சியை ஆண்ட ராஜா, பஞ்சகன். அவன் சிறந்த ஐயப்ப பக்தன். வேட்டைப் பிரியனும் கூட.

ஒரு நாள் ராஜா வேட்டைக்குக் கிளம்பினான். வழி தவறி, நடுக்காட்டைத் தாண்டி, பூதங்கள் வாழும் பயங்கரமான பகுதிக்குச் சென்றுவிட்டான்.

பூதங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அலறினான் மன்னன். தப்பிக்க வழியே இல்லை.

ஐயப்பன்தான் ஒரே கதி என்பது புரிந்து, “ஐயப்பா” என்று கதறினான் ராஜா.

அதேதான். சாஸ்தா, புலியின் மீது பறந்து வந்தார். ராஜாவைக் காப்பாற்றி னார். அப்புறம்? அந்த ராஜாவுக்கும் ஒரு மகள் உண்டு. பூரணா!

டும் டும் டும்!

பூரணாவை சாஸ்தா மணந்ததைக் கண்டு உள்ளம் கொதித்தான் ஒரு மந்திரவாதி. புரியவில்லையா? புஷ்கலாவின் தந்தையான பளிஞன் தான் அது.

ஆத்திரம் அடங்காத அவன், சாஸ்தாவைப் பார்த்துச் சாபமிட்டான்: “நீ ஒரு மனிதனாகப் பிறக்க வேண்டும். இரண்டு பெண்களை இப்போது மணந்த நீ, மனிதனாக, திருமணமே செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பாயாக!’’

சாஸ்தாவும் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டார். ஐயப்பனாக அவதரித்தார்.

ஆரைக்குளம் சாஸ்தாவை வழிபட்டுவிட்டு, அந்த மலை உச்சியில் ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று பாருங்கள். பூரணா, புஷ்கலா சமேத சாஸ்தா மட்டுமல்ல, அவர்களது மகன் சத்யகனும் உங்களுக்கு மானசீகமாக ஆசி புரிவான்!.





அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !

அறிந்து கொள்ளுங்கள் உங்களின் அடிப்படை உரிமைகளை !


1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)



2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)



3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)



4. சமய உரிமை (25-28)



5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)



6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)



சமத்துவ உரிமை :



பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.



பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.



பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.



பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.



சுதந்திர உரிமை



பிரிவு 19



அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்



அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்



ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்



இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்



ஈ. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்



உ. நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.



ஊ. எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)



பிரிவு 20



அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.



ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.



இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.



பிரிவு 21.



எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.



பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு



அ. கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.



ஆ. 3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.



இ. தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.



பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.



மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.



பிரிவு 24:



14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது..






இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்..

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்

இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்

இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி

இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா

இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா

இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி

இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்

ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி

முதல் பெண்அமைச்சர்  -  விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர்  -  ராஜ்குமாரி அம்ரித் கௌர்

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை  -   தேவிகா ராணி

முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி  -  அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  -   கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் பாரிஸ்டர்  -  கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி   -  அன்னா சாண்டி

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி  -  ஃபாத்திமா பீவி

முதல் பெண் மருத்துவர்  -  காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர்   -  பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன்  -  முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் டிஜிபி  -  காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர்  -   ஹோமி வியாரவாலா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்  -  பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண்  -   அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண்  -   ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண்  -  ஜூம்பா லாகிரி

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்  -  எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர்   -  அஞ்சலி ராஜகோபால்

இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்

தொழிலாளர்களுக்கான மீதூதியம் போனஸ் சட்டம்

தொழிலாளர்களுக்கான மீதூதியம்
போனஸ் சட்டம்


தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (Payment of Bonus Act - 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (Bonus) வழங்கப்பட்டு வருகிறது.

நோக்கம்
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.
மீதூதிய வகைகள்
மீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்ல.
உற்பத்தி மீதூதியம்
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது.
லாபத்தில் மீதூதியம்
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிறது.
வழக்காறு மீதூதியம்
தீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது.
ஒப்பந்த மீதூதியம்
தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இது.
மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்
இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.
இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.
வரையறைகள்
ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.
பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி,பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் நஷ்டத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது.)
ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலாம்.
4. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்.
ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்கள்.
மீதூதியம் கணக்கிடும் விதி
மீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது.
கழிவுகள்
ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.
செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.
தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம்.
அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.
மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் என்பதே கிடையாது

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான அபராத விபரமும்...!

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான அபராத விபரமும்...!


நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமானதாக, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரிவரி கடைபிடிப்பதில்லை என்றும், பலருக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிலர் அறியாமல் வாகனம் ஓட்டும்போது தவறுகளை செய்ய வாய்ப்புளளது. அவர்களுக்காக மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அதில் தவறுகளுக்கான அபராத விபரங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. லைசென்ஸ் இல்லைன்னா...
18 வயதுக்கு உட்பட்ட மைனர் வண்டி ஓட்டுவதும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 181ன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
 

02. அனுமதித்தாலும் குத்தம்தான்
டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பதும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 180ன் கீழ் தவறு. இதற்கு ரூ.1000 அபராதமாகவும், மூன்று மாதங்கள் சிறை தண்டனை வழங்க வழியுண்டு..

03. ஓவர்ஸ்பீடு
அதிவேகத்தில் வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் 183-1 ன் கீழ் ரூ.400 அபராதமாக விதிக்கப்படும்.
 

04. இடையூறு
போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 201ன் படி ஒரு மணிநேரத்திற்கு ரூ.50 வீதம் அபராதம் விதிக்க முடியும்.

05. பதிவு செய்யாத வாகனம்
புதிய வாகனம் வாங்கியுடன் பதிவு செய்யவில்லை என்றால் For Regn என்று நம்பர் பிளேட்டில் எழுதியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், தற்காலிக பதிவு எண்ணை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 192ன் கீழ் ரூ.5,000 வரை அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
 

06. தகுதி இழந்தவர்கள்...
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தகுதி இழந்தவர்கள் வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 182-1ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

07. தாத்தா வீட்டு ரோடு
எங்க தாத்தா வீட்டு ரோடு என்ற நினைப்பிலோ அல்லது சிக்னல் நெரிசலிலோ நடைபாதையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் RRR 177 கீழ் தவறு. இதற்கு ரூ.100 அபராதம் கட்ட வேண்டி வரும். அடுத்த முறை இதே தவறுக்கு ரூ.300 அபாராதம் விதிக்கப்படும்.
 

08. தாறுமாறாக ஓட்டினால்...
பிறரை அச்சுறுத்தும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184ன் கீழ் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

09. மொபைல்போன் பேச்சு
மொபைல்போன் பேசியபடி ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177ன் கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்தால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
 

10. செல்லமெல்லாம் வீட்டோட...
வளர்ப்பு பிராணிகளை காரில் செல்லும்போது அவை பிற வாகன ஓட்டிகளுக்கோ அல்லது டிரைவருக்கோ அச்சத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டம் 177/80 ன் கீழ் அவை தவறு. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்கலாம்.
 

11. உடல் தகுதி
உடல் நிலை அல்லது மன நிலை சரியில்லாத நிலையில் வாகனத்தை ஓட்டுவது பிரிவு 186ன் கீழ் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
 

12. ஸ்ட்ரீட் ரேஸ்
போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 189ன் கீழ் ரூ 500 அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராதமும், சிறைத் தண்டனையும் சேர்த்தும் விதிக்கப்படலாம்...