Sunday, 15 December 2024

மனோரஞ்சிதம் பூ MANORANJITHAM FLOWER

Yalang-Yalang Vine Plant, Manorangini, Hari champa, Artabotrys hexapetalus, tail grape.



         இறைவனை வழிபாடு செய்வதில் மலர்களே முதலிடம் பெறுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பாம்சம் உள்ளது. அழகிலும், நறுமணத்திலும் மலர்கள் தனிதனி இடம் பெறுகின்றது. அலங்காரத்திற்கும், திருமணத்திற்கும், திருவிழாக்களுக்கும் என பல்வேறு நிகழ்வுகளுக்கென மலர்கள் வகைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் பூஜைக்கென்றே சிறப்பாக வளர்க்கப்படும் தாவரம் "மனோரஞ்சிதம்" தான்.. தேவர்களால் இறைவனுக்கு பூஜிக்கப்படும் மலர் மனோரஞ்சிதம் மலர்தானாம். எல்லா பூக்களுமே கிலோகணக்கில் விற்கப்படும் பொழுது, மனோரஞ்சிதம் மட்டும் தனி ஒரு பூ- 5 ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை, விலை வைத்து விற்க்கப்படுகிறது..


   மனோரஞ்சிதம் பூவின் வாசனை, சுமார் எட்டு மீட்டர் வரை வீசும். இந்தப் பூவை கைகளில் வைத்துக்கொண்டு, எந்த வாசனையை நாம் நினைத்தாலும் அந்த வாசனையை உடனே உணர முடியுமாம்.. ஆனால் நான் முதன்முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை; மனோரஞ்சிதத்தை தவிற!!😊ஆக, எனக்கு நினைவில் நின்றது, மனோரஞ்சிதப் பூவின் வாசனை மட்டுமே!!

அறிவியலாளர்கள் இந்த பூவில் Methyl benzoate என்ற இராசயனம் உள்ளது. இந்த ரசாயணம் பொதுவாக நிறைய பழங்கள், பூக்களில் உள்ளது. அதனால் தான் மனோரஞ்சித மலரை கைகளில் வைத்து கொண்டு, வேறு பழத்தையோ, பூவையோ நினைத்தால், அந்த வாசனையை உணர முடிகிறது என்று விளக்கம் தருகிறார்கள்.



மனோரஞ்சிதம் தாவரம்:
  மனோரஞ்சிதம் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வளரக்கூடியது. சீதாபழ மர வகையை {Annonaceae} சார்ந்தது. அடர்ந்து புதர் போல வளரக்கூடியது. இரண்டுமீட்டர் உயரம் வளர்ந்ததும், கொடி போல மேலெழும்பி படரும். கொக்கி போன்ற காம்புகளில், பூக்கள் வர ஆரம்பிக்கும். பூக்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் தான் காணப்படும்.. நாளாக நாளாக அழகான மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். வாசனை ஊரையே கூட்டும்.. இதன் வாசனைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். நீண்ட நாட்களுக்கு மலர் வாடாமல் மணம் வீசிக்கொண்டே இருக்கும். குறைந்தது நான்கு நாட்களுக்கு வாடாது. சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மலர்.

  இந்த தாவரம் இந்தியாவிலும், ஆசியாவின் வெப்பமண்டலக் காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. மனோரஞ்சித தாவரத்தின் காய்கள் கொத்துகொத்தாக பச்சை நிறத்தில் காணப்படும். பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பார்பதற்கு எலுமிச்சை பழத்தை ஒத்திருக்கும். ஆமணக்கு விதை போல கொட்டைகள் இருக்கும். 


மனோரஞ்சிதம் வளர்ப்பு முறை:
      நல்ல செழிப்பான மண் வளம், நீர் வளம் உள்ள இடங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது மனோரஞ்சித தாவரம். இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பலன் தரக்கூடிய பணப்பயிராக விவசாயிகளுக்கு இது விளங்குகிறது. இதனை விதைகளின் மூலமும் கிளைகளை பதியம் போடுவதின் மூலமும் வளர்க்கலாம். விதைகள் மூலம் வளர்க்கும் பொழுது, குறைந்தது 5- ஆண்டுகளாவது ஆகும் பூக்கள் பூக்க. பதியம் போட்டு வளர்க்கும் போது இரண்டு ஆண்டுகளில் அடர்ந்து வளர்ந்து பூக்கள் பூக்கும். இதன் பூக்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல; மிகுந்த கவனத்துடன் பறிக்க வேண்டும். ஒவ்வொரு பூக்களுக்கு பின்புறம் மொட்டுக்கள் இருக்கும். அவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் பறிக்க வேண்டும். பூக்களை பறித்த உடன் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். ஈரப்பதத்துடன் பேக் செய்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

மற்ற மலர் சாகுபடிகளை விட, மனோரஞ்சித மலர் சாகுபடி, விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். 


இதன் காய்கள் பழுத்தால் மாம்பழம், கொய்யாப்பழம் போல நல்ல வாசம் வீசும். எப்பொழுதும் ஈரப்பதத்தோடு மண் இருக்க வேண்டும் என்பதால், இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சுவது சிறந்தது. இயற்கை உரங்களே போதுமானது. எந்த பூச்சி தாக்குதலும், நோய்தாக்குதலும் அதிகம் ஏற்படுவதில்லை.


மனோரஞ்சித மலரின் சிறப்பான அம்சங்கள்
       ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதிலே மலரை போட்டு விட்டால், அறை முழுவதும் வாசனை வீசும். வாசனை திரவியங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுகிறது. மனோரஞ்சித மலரின் வாசம் அதிக வலிமை பெற்றது. மனதை மட்டுமல்லாது, அதிகம் நுகர்ந்தால் சித்தத்தையும் பாதிக்கும். இதன் அதிக நறுமணத்தன்மையால் வசீகரிக்கப்படுவதால், இந்த மரத்தின் அடியில் பாம்புகள் தஞ்சம் கொள்ளும். அதனாலயே இந்த தாவரத்தை வீடுகளில் வளர்க்க அஞ்சுவார்கள். ஆனால் சிலர் மாடிதோட்டத்திலும் வளர்க்கிறார்கள்.. நான் கேள்வி பட்டவரை, இதுவரை பாம்புகள் ஏதும் வரவில்லை என்றே அவர்கள் கூறினார்கள்.
  
    இதன் வாசனை மன்மத உணர்வுகளை தூண்டக் கூடியது. அதனால் மதன்மஸ்த் என்றும் குறிபிடப்படுகிறது. மனோரஞ்சித மலர் மற்ற பூக்களைப் போல ரோஜா, செம்பருத்தி, டேரி பூக்களைப்போல வசீகரிக்கும் அடர்ந்த நிறங்களில் இல்லாத குறையை, அதன் அதீத ஆட்கொள்ளும் வாசனையில் ஈடுகட்டிவிடுகிறது. அதனால் அர்த்த ஜாம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலரில் ஒன்றாக இடம்பெறுகிறது. மஞ்சள் நிற மனோரஞ்சித மலர்களை கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சோமாஸ்கந்தரை , ஸ்ரீ கற்கபாம்பாள் உடனுடைய ஸ்ரீ காபாலீஸ்வரர் திருதலத்தில் சென்று தரிசிக்கலாம்.

மனோரஞ்சித மலரின் பயன்கள்:


      தென் இந்தியாவில் மனோரஞ்சித மலர்கள் இறைவனை பூஜிக்கவே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சீன தேசத்திலோ வணிக ரீதியாக வர்த்தகம் செய்கின்றனர். மனோரஞ்சித தாவரத்தின் இலைகளையும் பூக்களையும், காய்களையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். மேலும் மலரின் தீவிர வாசனையை, வாசனை திரவியங்களும் , கூந்தல் தைலங்களும் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். மனோரஞ்சித இலையினை கொண்டு தேநீரும் தயாரிக்கின்றனர். நம்நாட்டிலும் கிராமங்களில் காலரா வியாதிக்கு கஷாயம் செய்து பயன்படுத்தியதாக தெரிகிறது. 
மனோரஞ்சித மலர்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கிறது. தூயதமிழில் இந்த மலரின் ஆன்மீக பெயர் "தெளிந்தமனம்" என்றே உள்ளது. 


நன்றி உறவுகளே!!..  

இவ்வளவு நேரம் உங்கள் அருமையான நேரத்தை வலைதளத்தில் செலவழித்து இந்த பதிவை படித்ததற்கு.. ஏனெனில் இப்பொழுதெல்லாம் வாசிக்கும் வழக்கம் நம்மிடம் குறைந்துவிட்டது. எல்லாமே fast. எவ்வளவு அருமையான, பொன்னான விஷயமாயிருந்தாலும் கண்மூடி திறக்கும் ஒரே நிமிடத்தில் முடிந்துவிட வேண்டும். ஆனால் ஒரு தகவலை மிக வேகமாக, காதால் கேட்டு கடந்து போவதை விட, வாசிக்கும் போது, நம் மனதிற்கும் அறிவிற்கும் தகவல்கள் கொண்டு செல்லபட்டு, பதியப்படுகிறது. அதனால் தான் ஒரு சிறந்த, திறமையான ஆசிரியர்கள் பாடத்தை கற்று தந்தாலும் அதே விஷயங்களை கொண்ட புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாணவர்களுக்கும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவது நம் கடமை. யோசித்து பாருங்கள் புத்தகங்கள் வாசித்த காலங்களில் நம் வாழ்கை எவ்வளவு நலமாயிருந்தது. யோசிப்போம். வாசிப்பதை கொஞ்சமாவது வழக்கமாக்கி கொள்ள முயற்சிப்போம்!!

நன்றி. 

இப்படிக்கு உங்கள்

செண்பகராஜ் க





Saturday, 24 July 2021

உங்க கனவில் பாம்பு வந்தால்!!! என்ன அர்த்தம் என்று தெரியுமா!!

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…உங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்
ஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை ரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம். சுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம்; ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.மறைந்திருக்கும் பேரார்வங்களை கொண்டுள்ளீர்களா?கனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும். அதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும்கனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.பாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்
பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும். இந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.
பாம்புகளுடனான உங்களது தனிப்பட்ட சமன்பாடு
கனவில் வரும் பொதுவான விலங்கு என்னவென்று பார்த்தோம் என்றால் அது பாம்பு தான். பாம்பு என்பது சிக்கல் மிகுந்த சின்னங்கள் ஆகும். அதற்கு காரணம் அவை நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு அர்த்தங்களையும் கொண்டிருக்கும். பாம்பு வரும் கனவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பாம்புகளுடனான உங்களது சொந்த அனுபவங்களை கருத வேண்டும். அதேப்போல் உங்களது கலாசாரத்தில் பாம்புகள் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பாம்பை வளர்ப்பு பிராணியாக வைத்துக் கொண்டால், அதை வெறுப்பவருக்கோ அல்லது பயப்படுபவருக்கோ வரும் கனவை விட வளர்ப்பவருக்கு வரும் கனவின் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும்.
பாம்புகள் பயத்தை குறிக்கும்
பலருக்கும் பாம்பு என்றால் குலையே நடுங்கும். கணிக்க முடியாதவை பாம்பு. எந்தவொரு எச்சரிக்கை இன்றியும் அது எப்போது வேண்டுமானாலும் தாக்கும். அதனால் பாம்பு வரும் கனவு உங்கள் வாழ்க்கையில் கணிக்க முடியாத ஒன்றையோ அல்லது உங்களது கட்டுப்பாட்டை மீறிய ஒன்றையோ குறிக்கும். தெரியாத ஒன்றின் மீது நீங்கள் பயம் கொண்டவராக இருப்பீர்கள்.
மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை பாம்பு குறிக்கும்
வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதர ….🙏🙏

Friday, 23 July 2021

யார் வீட்டில் பாம்பு வரும்? உங்கள் வீட்டிற்குள்ளும் பாம்பு புகுந்துள்ளதா? வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க என்ன செய்வது? பாம்பு வந்து விட்டால், அது நம்மை தீண்டாமல் இருக்க என்ன செய்வது?????????????????????????????????

பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பார்கள்! இப்படிப்பட்ட இந்த பாம்பு வசிக்கக்கூடிய காடு மேடு கழனிகள் எல்லாம், வீடு கட்டும் நிலங்களாக மாற்றி விட்டு, அந்த இடத்தில் வீடு கட்டி குடி போகிறார்கள். அதன் பின்பு வீட்டிற்குள் பாம்பு வரத்தான் செய்யும். நாம் வசிக்கும் இடத்திற்கு பாம்புகள் வரவில்லை. பாம்பு வசிக்கும் இடத்தில் தான் நாம் குடி சென்று இருக்கின்றோம். இதை நாம் முதலில் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது கடந்த சில வருடங்களாக, பல காடு, கழனிகள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.கிராமப்புறங்களில் வசிப்பவர்களது வீடுகளிலும் பாம்புகள் வீட்டிற்குள் வரும் பிரச்சினைகள் உண்டு. எல்லோரது வீட்டிலும் பாம்புகள் நுழையாது. வீட்டை சுற்றி கொண்டிருக்குமே தவிர, சில பேர் வீடுகளில் மட்டும் தான், வீட்டிற்குள் நுழையும். நகர்ப்புறங்களிலும் சில சமயங்களில் சில பேரது வீட்டில் பாம்பு நுழைந்த கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறாக உங்களுடைய வீடு கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும் சரி, வயல்வெளிகளில் வீடு கட்டி, அந்த இடத்தில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பாக பாம்பு வீட்டிற்குள் நுழைகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? எதனால் நுழைகிறது? பாம்பு வீட்டில் நுழைந்து விட்டால் அது நம்மை தீண்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.உங்களுடைய வீட்டில் பரம்பரை பரம்பரையாக, செய்து வந்த வழிபாட்டு முறையை திடீரென்று மாற்றினாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக உங்களுடைய முன்னோர்கள் செய்து வந்த காரியத்தை நீங்கள் செய்யாமல் விட்டு இருந்தாலும், உங்களுடைய  வீட்டில் பாம்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.சில பேரது வீட்டில் விவசாயம் செய்வதை தொழிலாக வைத்திருப்பார்கள். இப்படியாக காடுகளுக்கு செல்லும்போது, விவசாயம் செய்யும் போது, பாம்பை கொன்று இருந்தாலும், அல்லது பாம்புப் புற்று இருந்த இடத்தில் அந்த பாம்பு புற்றை நீக்கிவிட்டு, விவசாயம் செய்தாலும், அந்த இடத்தில் வீடு கட்டினாலும், தொழில் செய்யும் இடம் கட்டினாலும், இப்படிப்பட்டவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.சில வீட்டில் இருக்கும் பெண்கள் இறைவனை ரொம்ப வழிபாடு செய்வார்கள். அதாவது உருகி உருகி விரதமிருப்பது, வேண்டுதல் வைப்பது போன்ற ஆன்மீக ரீதியான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு மன குழப்பங்கள் நிறைய எழுந்துகொண்டே இருக்கும். தேவையற்ற சிந்தனையோடு வாழ்பவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.இப்படியாக வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது. என்ன செய்வது? பயம்! அதை அடித்து தான் ஆக வேண்டும். நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது. இப்படியாக அந்தப் பாம்பை அடித்தவர்களினுடைய சந்ததியினர் எங்கு வீடு கட்டினாலும் அவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும் என்று சொல்லப்பட்டுள்ளது.பாம்பு இந்த இடத்தில் இருக்கின்றது என்று காட்டிக் கொடுத்தவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும். என்று சொல்லப்பட்டுள்ளது. சரிங்க இந்த பாம்பு வீட்டிற்குள் புகாமல் இருக்க ஏதாவது வழி உள்ளதா? என்று கேட்பவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் பதில் உள்ளது.நாட்டு மருந்து கடைகளில் விற்கும் நாக தந்தி வேர் என்று சொல்லப்படும் இந்த வேரை வாங்கி ஒரு செப்பு கம்பியால் கட்டி, வீட்டின் நான்கு பக்கங்களிலும் வைத்துவிட்டால் வீட்டிற்குள் பாம்பு நுழையாது. இதேபோல் சிறியாநங்கை பெரியாநங்கை செடிகளை, வீட்டின் முன் பக்கம் பின் பக்கம் போன்ற இடங்களில் வளர்த்தாலும் வீட்டிற்குள் பாம்பு நுழையாது. பொதுவாகவே நல்ல பாம்பு, சாரை பாம்பு இந்த இரண்டு பாம்புகளை அடிக்கக் கூடாது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். மற்ற பாம்புகள் ஆக இருந்தாலும் அதை அடிப்பது பாவம் தான், இருப்பினும் விஷமுள்ள ஜந்து தீண்டி விடுமோ என்ற பயத்தில் உயிர் மேல் உள்ள ஆசையில் அடித்து விடுகின்றோம். குறிப்பாக நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் அடிக்கக் கூடாது என்று மட்டும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிஞ்ச வரைக்கும் இத அடிக்காமல் பாத்துக்கோங்க!உங்களுக்கு மன உறுதியும் மன தைரியமும் அதிகமாக இருக்கின்றதா? தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருந்தால், உறுதியோடு இருப்பவர்களாக இருந்தால் மட்டும், ஒருவேளை உங்களுடைய வீட்டில் பாம்பு வந்து விட்டாலும் அல்லது பாம்புகள் உலவும் வயல்வெளிகளுக்கு நீங்கள் சென்றாலும், உங்களை பாம்புகள் தீண்டாமல் இருக்க, உங்கள் பக்கம் பாம்புகள் வராமல் இருக்க இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம். நிச்சயம் பாம்பு உங்களுடைய கண்களுக்கு தென்படாது. உங்களுக்கான அந்த மந்திரம் இதோ! ஓம் அஸ்திக சித்தா ரட்சிப்பாய்!ஒருவேளை உங்களுடைய வீட்டிற்குள் பாம்புகள் நுழைந்து விட்டால், இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரித்தால், பாம்பு வந்த வழி தெரியாமல் போய்விடும். பதிவில் படித்து விட்டோம் என்பதற்காக, விஷமுள்ள பாம்பை கண்டவுடன், இந்த மந்திரத்தை சொல்லி, அந்தப் பாம்பு கிடைக்கின்றதா என்றெல்லாம் சோதிக்கக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள மந்திரம் இது. நம்பிக்கை உள்ளவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவு இது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Saturday, 20 March 2021

சித்தர்கள்_எழுதிய_அருந்தமிழ்.....!!

#சித்தர்கள்_எழுதிய_அருந்தமிழ்.....!!
அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..

பெயர்களையாவது படித்து அறிந்துகொள்வோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. கந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.உதயண குமார காவியம் 2.நாககுமார காவியம்
3.யசோதர காவியம்
4.சூளாமணி
5.நீலகேசி 
போன்ற ஐஞ்சிறு காப்பியங்கள்...!

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய பிரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

Thursday, 31 May 2018

புதிய பாடநூல்கள் (1,6,9,11)

புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. File size கொஞ்சம் அதிகம். ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அட்டகாசமாக வந்துள்ளது. பார்த்து மகிழவும் 👍🏻🙏🏻

http://tnscert.org/tnscert/ebooks/

Monday, 28 May 2018

Useful links

Dear Civil Services Aspirants

✳ Complete Current Affairs for Prelims 2018⬇

1. News Juice Monthly May Edition 2018
https://prepmate.in/app/uploads/2018/05/News-Juice-Monthly-May-Edition-2018.pdf

2. News Juice Monthly April Edition 2018
https://prepmate.in/app/uploads/2018/04/News-Juice-Monthly-April-Edition-2018.pdf

3. News juice Monthly March Edition 2018
https://prepmate.in/app/uploads/2018/03/News-Juice-Monthly-March-Edition-2018.pdf

4. News juice Monthly February Edition 2018
https://prepmate.in/app/uploads/2018/02/News-Juice-Monthly-February-Edition-2018.pdf

5. News juice Monthly January Edition 2018
https://prepmate.in/app/uploads/2018/01/News-Juice-Monthly-January-Edition-2018-1.pdf

6. News juice Monthly December Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/12/News-Juice-Monthly-December-Edition-2017-1.pdf

7. News juice Monthly November Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/11/News-Juice-Monthly-November-Edition-2017-2.pdf

8. News juice Monthly October Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/10/News-Juice-Monthly-October-Edition-2017-2.pdf

9. News juice Monthly September Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/09/News-Juice-Monthly-September-Edition-2017-1.pdf

10. News juice Monthly August Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/08/News-Juice-Monthly-August-Edition-2017.pdf

11. News juice Monthly July Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/07/News-Juice-Monthly-July-Edition-2017-1.pdf

12. News juice Monthly June Edition 2017
https://prepmate.in/app/uploads/2017/06/News-Juice-Monthly-June-Edition-2017.pdf
[ Please check below website. It is useful

https://www.tntextbooks.in/p/11th-books.html?m=1
SOME USEFUL SOFTWARES AND OTHER USEFUL GOOGLE DRIVE LINKS

Autodesk Sketchup Pro 2016.zip.
https://drive.google.com/file/d/1enQA3MCQgcLE35-FGU83YhWMd48bC_g0/view?usp=drivesdk

SonyVegasPro v13 Build453 (x64) with Crack.zip.
https://drive.google.com/file/d/1wlK6S0sOeca6A0L2UqUGt8GX6D_ZCPi-/view?usp=drivesdk

Adobe Photoshop CS5 (Extended Edition) with Crack.zip.
https://drive.google.com/file/d/1gO1VhsFFMU5j3xHHpVzi9aJL9-zkOFZI/view

Sony music editor for pc.
https://drive.google.com/file/d/1GU59ZAojFFSqLVNnbO7thG0uRrhapi36/view

Adobe Illustrator CS6 with Crack (x86/x64).
Size - 2 GB.
https://drive.google.com/file/d/1zSGM_hEfL8ZsCvsebH5gh6tyI8Olad0z/view

Adobe Photoshop Extended Edition with Crack
Size - 1.2 GB
https://drive.google.com/file/d/1gO1VhsFFMU5j3xHHpVzi9aJL9-zkOFZI/view

Nitro PDF Pro 10.5.1.17 with Crack.
https://drive.google.com/file/d/1r-A2RRBipmekSHQfspwCo9n6rqi_yJUl/view

CCleaner Professional Plus v5.25.0.5902 (x86/x64) with Crack.
https://drive.google.com/file/d/1HEbUunWliwlimYsDVVSaj39YjCIR_qAo/view

PowerISO v7 with Crack.
https://drive.google.com/file/d/1FibNoJzyIt-raBzyHQf22PlKIsadQXSf/view

VMware Workstation v14 with Crack.
Size - 410 MB.
https://drive.google.com/file/d/18oHpYLVSIcaCe1BTup8OgX9c-xjz1UTK/view

Daemon Tools Pro Advanced v5.2.0 with Crack
https://drive.google.com/file/d/1EoV1LecqAUxqhMOCjrgv0UfGp2T8vpCt/view

Revo Uninstaller Pro v3.1.8 with Crack
https://drive.google.com/file/d/1adQuDLDF276a0YE_5NsTpXr5W1eBy8Ti/view

Sony Sound Forge Pro v11 (Build 272) with Crack
Size - 330 MB
https://drive.google.com/file/d/1GU59ZAojFFSqLVNnbO7thG0uRrhapi36/view

Sony Vegas Pro v13 (x64) with Crack
Size - 400 MB
https://drive.google.com/file/d/1wlK6S0sOeca6A0L2UqUGt8GX6D_ZCPi-/view

Autodesk Sketchup Pro 2016 with Crack
Size - 312 Mb
https://drive.google.com/file/d/1enQA3MCQgcLE35-FGU83YhWMd48bC_g0/view

CorelDraw Graphics Suite X7 with Crack
Size - 1.3 GB
https://drive.google.com/file/d/1T2VEdd07TJlWtq4GjsTonM8-V0BYHr2v/view

IDM (Internet Download Manager) 6.28 Build 7 with Crack
Size - 15 MB
https://drive.google.com/file/d/19HMrZQOokRWJpWJTBJnFWVwlbO_0eUBO/view

Reccuva Professional 1.52.1086 with Crack
Size - 5 MB
https://drive.google.com/file/d/1Kg58Y-T1xap2lU80FQoVse1vjwD3xQ8V/view

Microsoft Windows XP (SP3) Preactivated ISO 
Size - 623 MB https://drive.google.com/file/d/1MCnqqEthSwKNqPCKBu-aIoyzUHkl9YH6/view

Atomix Virtual DJ Pro v8 with Crack
Size - 130 MB
https://drive.google.com/file/d/1QtSMfVot_Cil0Jw1yhHreoZxF1TWFwfV/view

Daemon Tools Pro v8 with Crack
Size - 39 MB
https://drive.google.com/file/d/1y8mgJ7nmUl38NXe4tOAHh2qlr7EFzeAz/view

Hotspot Shield Elite v6.20.9 Multilanguage with Crack
Size - 25 MB
https://drive.google.com/file/d/1Ah8X9UJkifob7Fu5FIjP8vZPz9AYoWs7/view

Wondershare Video Converter Ultimate v8.7.0.5 With Crack.
Size - 53 MB
https://drive.google.com/file/d/15SJGZujaYZGmySrIcvhJH3aor_HJcL9Y/view

VMWare Workstation Pro v14.0
https://drive.google.com/file/d/1CiMaSZtNMqoUOCnHLQ7SvJFJqgxPJx3G/view

4k Android Wallpapers
https://drive.google.com/drive/mobile/folders/1PAZVGUzdfGr9z_wauYzmu52c2jyImiNM

Books
https://drive.google.com/drive/mobile/folders/0B6TUap6XJ89LbnVzSnpIWHB4QWM

Kali Linux x64 latest iso.
https://drive.google.com/file/d/1W42jlzarTFaa7wAq_mGyvTsS-fNi8fRw/view
This is telugu drive... If you need any English material download it:
👉For DSC and TET books uploaded in below drive link👇

https://drive.google.com/folderview?id=0B3NkIkgzJ3TJNGctS1g4eFhtUE0
Clear Speech

Book:
https://drive.google.com/file/d/0B5xy8BXhw3AAckdreXdEcnRhcms/view?usp=drivesdk

CD:
https://drive.google.com/file/d/0B5xy8BXhw3AAeTkzSkQtX0RzelU/view?usp=drivesdk

Sunday, 16 April 2017

வங்கியில இத்தனை வகைகள் இருக்கா?

வங்கியில இத்தனை வகைகள் இருக்கா?


நுகர்வோர் வங்கிகள் (கன்ஸ்யூமர்ஸ் பாங்க்)

ஏற்கனவே உள்ள வங்கிகளில் தற்போதைய புதுவரவு இந்த நுகர்வோர் வங்கிகள். இது போன்ற வங்கிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் நுகர்வோர்களுக்கு நீடித்து உழைக்கும் நுகர்வு பொருட்களான கார், டிவி, வாஷிங் மெஷின் ஆகியவற்றை வாங்குவதற்கான கடன்களை அளிப்பதாகும். இந்தக் கடனை நுகர்வோர்கள் தவணை முறையில் திரும்பச் செலுத்தலாம்.



பரிமாற்ற வங்கிகள் (எக்ஸ்சேஞ்ச் பாங்க்)

ஹாங்காங் பாங்க், பாங்க் ஆஃப் டோக்கியோ மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்தப் பரிமாற்ற அல்லது அயல் நாட்டு வங்கிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த வங்கிகளின் முக்கிய நோக்கம் அயல் நாட்டு வர்த்தகத்திற்கு நிதியுதவி செய்வது. இவை அடிப்படையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பணத்தை அனுப்புவது, அயல் நாட்டுச் செலுத்துகை பில்களைத் தள்ளுபடி அடிப்படையில் செலுத்துவது (டிஸ்கவுண்டிங்), தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது விற்பது மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.



கூட்டுறவு வங்கிகள்

இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1912-இன் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் சிறிய விவசாயிகள், மாத சம்பளம் ஈட்டும் பணியாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்குக் கடன் அளிக்கின்றன.

இந்த வங்கிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் அமைந்திருக்கும். இவற்றின் செயல்பாடுகள் பிற வர்த்தக வங்கிகளைப் போன்றே இருக்கும்.



வர்த்தக வங்கிகள்

இந்தியாவில், வர்த்தக வங்கிகள் நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு 14 வர்த்தக வங்கிகளை அரசுடைமையாக்கியது. வைப்புகள், கடன்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வர்த்தக வங்கிகள் தொழில் புரிவோருக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டன.

இந்த வங்கிகள் பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று அவற்றைத் தொழில் புரிவோர்க்குக் குறுகிய காலக் கடன்களை ரொக்கமாகவோ அல்லது கூடுதல் பற்று (ஓவர் ட்ராப்ட்) மூலமாகவோ வழங்குகின்றன.

இந்த வங்கிகள் காசோலை (செக்) வசூல், பில் பரிமாற்றம் மற்றும் பணச் செலுத்துகை போன்ற பல்வேறு சேவைகளைத் தருகின்றன.



மத்திய மற்றும் தேசிய வங்கிகள்

மத்திய வங்கிகள் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் இது ரிசர்வ் வங்கி எனவும், அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி எனவும் இங்கிலாந்தில் பாங்க் ஆஃப் இங்க்லேண்ட் எனவும் இயங்கி வருகிறது.

இந்த மத்திய வங்கிகள் பெரும்பாலும் மற்ற வங்கிகளுக்கு வங்கியாகச் செயல்படுகின்றன. காகித ரூபாய் தாள்கள் வெளியிடுவது, அரசிற்கு வங்கியாகச் செயல்படுவது, அன்னிய செலாவணியை நெறிமுறைப் படுத்துவது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளை இவை செய்கின்றன. இந்த மத்திய வங்கிகள் இலாப நோக்கமற்றவை.



தொழில் மற்றும் வளர்ச்சி வங்கிகள்

இந்த வங்கிகள் பெரும்பாலும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாகவும், நீண்ட காலக் கடன்களை நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலமாகவும் பணத்தைச் சேகரிக்கின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட காலக் கடன் அளித்து அவற்றை விரிவு படுத்தவும் நவீனப் படுத்தவும் உதவுகின்றன.

இந்தியாவில், இதுபோன்ற வங்கிகள் சுதந்திரத்திற்குப் பின் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் இந்திய தொழில் முதலீட்டுக்கழகம் (ஐஎஃப்சிஐ), இந்திய தொழில் நிதி மற்றும் முதலீட்டுக் கழகம் (ஐசிஐசிஐ) மற்றும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) ஆகியவை முக்கியமானவை).